24116474 fisherman
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்குக் கடலில் கைதான 11 மீனவர்கள் திக்கோவிட்டவுக்கு அழைத்து வரப்பட்டனர்! தெஹிபாலவின் பின்னணி குறித்து சந்தேகம்!

Share

தெற்குக் கடற்பரப்பில் வைத்து சுமார் 270 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடிப் படகுகளும், அதில் இருந்த 11 சந்தேகநபர்களும் இன்று (25) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கடற்படையினர் முன்னெடுத்த முதற்கட்ட சோதனையில், சுமார் 200 கிலோ போதைப்பொருளுடன் ஒரு படகும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதே கடற்பரப்பில் தொடர்ந்த சோதனையில், மற்றுமொரு பலநாள் மீன்பிடிப் படகுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து இரண்டு செய்மதித் தொலைபேசிகளும் (Satellite Phones) கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக இரண்டு படகுகளிலிருந்தும் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ (Ice) ரக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட இந்த பாரிய போதைப்பொருள் தொகையை, வெளிநாட்டிலிருந்து ‘தெஹிபால’ எனப்படும் கடத்தல்காரரே நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகப் பாதுகாப்புத் தரப்பினர் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் சர்வதேச புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...