vikatan 2020 09 9a098bc1 057c 44c8 9925 dfde17dde293 158542 thumb
இந்தியாசெய்திகள்

உதயநிதியை மிரட்டிய சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி

Share

உதயநிதியை மிரட்டிய சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவேன் என்ற சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி தருவேன் என நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சீமான் சென்னையில் தனது தொண்டர்களுடன் கிருஷ்ன ஜெயந்தி விழாவை கொண்டாடினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர்,”உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி பேசியது தவறில்லை. அவர் பேசிய கருத்துடன் தான் மோத வேண்டும். அது தான் ஜனநாயகம். அதை விட்டு, தலையை வெட்டுவேன் என்று கூறுவது முறையல்ல. அவர், எறிந்த பந்தை வைத்து பாஜக விளையாடுகிறார்கள்” என்றார்.

மேலும் அவர், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவேன் என்று சொன்ன சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி நான் தருகிறேன். தலையை வெட்டுவேன் என்று கூறுபவர்கள் சாமியார் அல்ல, கசாப்புக்கடைக்காரர்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய சீமான், “மனித பிறப்பில் பாகுபாடு பார்ப்பவர்களை நான் எதிரியாக கருதுகிறேன். அந்த வகையில், சனாதனத்தை எதிர்க்கிறேன். டெங்கு நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை உதயநிதி ஒழிக்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றால் கர்நாடகாவில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்காமல் இருப்பது ஏன்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F27jvfekTpzayau9faoUh
செய்திகள்இலங்கை

இலங்கை யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவை அறிமுகம்: இந்திய மொபைல் எண்ணின்றிப் பணம் செலுத்த வசதி!

இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பௌத்த யாத்ரீகர்களுக்காக UPI One World டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான...

images 2 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு: டென்மார்க்குடன் இலங்கை இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து – 39 மில்லியன் டாலர் கடன் நிவாரணம்!

நடந்து வரும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசு டென்மார்க் அரசுடன்...

images 2 7
செய்திகள்இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள்: இந்தியத் துணைத் தூதர் சந்தித்து வாழ்த்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதர் திரு. ஹர்விந்தர்...

MediaFile 13
செய்திகள்இலங்கை

மொரட்டுவ பாடசாலை மாணவர் துஷ்பிரயோகம்: ஆசிரியர் விளக்கமறியலில்; சம்பவத்தை மறைத்த அதிபர் பிணையில் விடுதலை!

மொரட்டுவப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம்...