sugar
செய்திகள்அரசியல்இலங்கை

துறைமுகத்தில் தேங்கியுள்ள 100 கோடி பெறுமதியான சீனிக் கொள்கலன்கள்!

Share

100 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிகொண்ட சீனிக் கொள்கலன்கள் துறைமுகத்திலேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள 300 கொள்கலன்களில் 7,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிக தொகை சீனி காணப்படுவதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு துறைமுகத்தில் காணப்படும் சீனிக் கொள்கலன்கள் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டவை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தாமதக் கட்டணமாக பெருந்தொகையான பணம் செலுத்தவேண்டியேற்பட்டுள்ளதால் சீனி கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், 05 இறக்குமதியாளர்களால் 5 மாதங்களுக்கு முன்னர் 400 கொள்கலன்களில், 12, 000 மெட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டொலர் பற்றாக்குறை காரணமாக இந்த சீனிக் கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து விடுவிப்பதில் தாமதம் ஏற்படுள்ளதாகவும் தெரியவருகிறது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...