22 61dbd7ff18b22
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் வெற்றுப் போத்தலை குடுத்தால் 10 ரூபாயா?

Share

இலங்கையில் வெற்றுப்போத்தலை கொடுத்தால் லங்கா சதோச மூலம் 10 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிமுகம் செய்துள்ளார்.

இது குறித்து பந்துல குணவர்தன தெரிவிக்கையில்,

புதிய குடிநீர் போத்தலை 35 ரூபாவிற்கு அறிமுகப்படுத்தி விற்பனை செய்கிறோம். அத்தோடு லங்கா சதொச நிறுவனம் மூலம், நாட்டின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களையும் இணைக்கும் விதமாக லங்கா சதொச நிறுவனம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

இதன் மூலம் ஒரு வெற்று போத்தலைத் திருப்பிக் கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும்.இந்த முயற்சியின் மூலம் நாடு முழுவதும் குறைந்த விலையில் குடிநீர் போத்தல்கள் கிடைப்பதுடன், சுற்றுச்சூழலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக்கின் அளவைக் குறைப்பதற்கும் பங்களிக்க முடியும்.

இதன் மூலம், மற்ற குடிநீர் போத்தல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சவால் விட நாங்கள் விரும்பவில்லை.

ஆனால், அவர்களும் இந்த போத்தல்களை மீட்டெடுக்கும் முறையைப் பயன்படுத்தினால், அது சூழலுக்கு உகந்த வணிகமாக மாறும் என்றார்.
#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...