1763620233 driving 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாட்டினருக்கு வாகனம் கொடுக்கும் முன் கவனம்! உரிமையாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை.

Share

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டுப் பிரஜைகளிடம் மோட்டார் வாகனங்களை வழங்கக் கூடாது என்றும், மீறுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று (26) காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர இது குறித்து விளக்குகையில்:

இலங்கையில் செல்லுபடியாகும் சர்வதேச அல்லது உள்ளூர் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் தமது வாகனங்களைச் செலுத்துவதற்குக் கொடுக்கும் உரிமையாளர்களுக்கு எதிராகவே இந்தச் சட்ட நடவடிக்கை பாயும்.

நாட்டில் அண்மைய காலமாக விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வீதி விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வாடகைக்கு வாகனங்களைப் பெற்றுச் செல்லும்போது, அவர்களின் அனுமதிப்பத்திரத்தைச் சரிபார்க்க வேண்டியது வாகன உரிமையாளர்களின் கடமையாகும். முறையற்ற வாகனப் பயன்பாட்டால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க வீதி சோதனை நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வாகன உரிமையாளர்கள் தேவையற்ற சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கவும், வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஒத்துழைப்பு வழங்குமாறு போக்குவரத்துத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...