தேக்கமடைந்துள்ள உர மானியக் கொடுப்பனவுகள் அனைத்தும் அடுத்த சில தினங்களுக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பீடு செய்யப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரட்ண எழுப்பிய கேள்விக்கு நேற்று (05) பதிலளித்த பிரதி அமைச்சர் பின்வரும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
உர மானியம் வழங்குவதற்குத் தேவையான முழுமையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே திறைசேரியினால் விடுவிக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் பேரிடர் சூழல் காரணமாக, நிர்வாக ரீதியில் நிதியை விநியோகிப்பதில் சிறு தாமதம் ஏற்பட்டது.
தற்போது தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில நாட்களில் அனைத்து விவசாயிகளும் தங்களுக்குரிய கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதை அரசாங்கம் உறுதி செய்யும்.
இந்த அறிவிப்பானது, பெரும் போகச் செய்கையில் ஈடுபட்டுள்ள மற்றும் அடுத்த போகத்திற்குத் தயாராகும் விவசாயிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.