30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

Share

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதன்படி, ரியாத்துக்கான தினசரி விமான சேவைகள் இன்று இரவும், டுபாய்க்கான சேவைகள் நாளையிலிருந்தும் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

மத்திய கிழக்கின் நிலைமைகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இயக்கப்படவுள்ள விமானங்களின் விபரங்கள் பின்வருமாறு: 

UL265   Colombo–Riyadh   18:15 hrs 

UL266   Riyadh–Colombo   22:35 hrs 

UL231   Colombo–Dubai 1  2:40 hrs 

UL232   Dubai–Colombo   17:00 hrs 

மேலதிக விபரங்களுக்கு பொதுமக்கள் www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Share
தொடர்புடையது
29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...

21 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாத்துவ – பின்வத்தை ரயில் பாலத்தில் கோர விபத்து: சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

வாத்துவ மற்றும் பின்வத்தை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது இன்று...