images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

Share

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் இம் மாதம் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே ரயில் பருவச் சீட்டுகளை வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்தக் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

2025 நவம்பர் மாதத்துக்குச் செல்லுபடியாகும் மாதாந்த (Monthly) மற்றும் மூன்று மாத காலப் (Three-Monthly) பருவச் சீட்டுகளை (Season Tickets) இம் மாதம் டிசம்பர் 7ஆம் திகதி வரை பயன்படுத்தலாம் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் கால நீடிப்புச் சலுகை வாராந்தப் பருவச் சீட்டுகளுக்குப் (Weekly Season Tickets) பொருந்தாது என்பதையும் ரயில்வே திணைக்களம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...