Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

Share

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில் இருந்த 81 வயதுடைய வயோதிபத் தாய் சிகிச்சை பலனின்றி இன்று (29) உயிரிழந்துள்ளார்.

அரியாலையைச் சேர்ந்த பரமசிவம் பரமேஸ்வரி (81 வயது) என்பவர் ஆவார்.

கடந்த 17 ஆம் திகதி, பரமேஸ்வரியின் மகள் வீட்டின் அருகே குப்பைகளைக் கூட்டித் தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு அவர் கடைக்குச் சென்றுள்ளார். அந்தச் சமயத்தில், தாயார் வீட்டின் உள்ளே அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

வெளியே வைக்கப்பட்ட தீயானது ஜன்னல் வழியாக வீட்டிற்குள் ஊடுருவி, அங்கிருந்த ஆடைகளில் பற்றியுள்ளது. தொடர்ந்து தீ வேகமாகப் பரவி வீட்டின் கூரை மரங்களிலும், படுக்கையில் இருந்த வயோதிபத் தாய் மீதும் பற்றியுள்ளது.

தாயின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அருகில் வசித்த அவரது மற்றொரு மகள் ஓடிவந்து தீயைக் கட்டுப்படுத்தி, பலத்த காயங்களுடன் இருந்த பரமேஸ்வரியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், சுமார் 12 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை யாழ். திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். கவனக்குறைவாகத் தீ வைத்தமையால் ஏற்பட்ட இந்தச் சோகமான மரணம் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...

af522c79 ms3g0pcm6uei4b50d8z7a
செய்திகள்உலகம்

இங்கிலாந்து திருச்சபையின் வரலாற்றில் முதல் பெண் பேராயர்: சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதி!

இங்கிலாந்து திருச்சபையின் (Church of England) 106-வது கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி (Sarah Mullally)...