image c2e1eb9200
செய்திகள்இலங்கை

மேகாலயா சுரங்க விபத்து: உயிரிழப்பு 25 ஆக உயர்வு – பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

Share

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் (East Jaintia Hills) மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இதுவரை சுரங்கத்திலிருந்து 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உயர் அதிகாரி மணீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சுரங்கத்திற்குள் பாறைகளைத் தகர்க்கப் பயன்படுத்தப்படும் டைனமைட் (Dynamite) வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்துத் தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் சுரங்கத்திற்குள் எத்தனை தொழிலாளர்கள் பணியில் இருந்தார்கள் என்பது குறித்த தெளிவான தரவுகள் இல்லை. எனவே, இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேகாலயாவில் ‘எலி வளை’ (Rat-hole mining) போன்ற அபாயகரமான நிலக்கரி அகழ்வு முறைகளுக்கு நீதிமன்றத் தடைகள் இருந்தபோதிலும், சட்டவிரோதமான முறையில் இத்தகைய சுரங்கங்கள் இயக்கப்படுவது இத்தகைய தொடர் விபத்துகளுக்குக் காரணமாக அமைவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...