johnston
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்: பெப். 13 வரை நீடிப்பு!

Share

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், ‘சதொச’ நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறையற்ற விதத்தில் தனது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாக (துஷ்பிரயோகம்) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID), முன்னாள் அமைச்சர் உட்பட ஐந்து பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை நீடிக்குமாறு வத்தளை நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வாகனத் துஷ்பிரயோகம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...