Screenshot 20251211 014558 Facebook
செய்திகள்இலங்கை

முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து வங்கி அட்டைத் திருட்டு: பொலன்னறுவை நபர் களுத்துறையில் கைது!

Share

வங்கி ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின் வங்கி அட்டைகளைத் திருடி வந்த 42 வயதுடைய நபர் ஒருவரைத் தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 30ஆம் திகதி தெற்கு களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அரச வங்கி ஒன்றில் கடமையில் இருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரைச் சோதனையிட்டதில் இந்த மோசடி அம்பலமானது.

சந்தேக நபரிடமிருந்து அவருக்குச் சொந்தமில்லாத 11 வங்கி அட்டைகள் மற்றும் வேறொரு நபரின் சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.பொலன்னறுவையைச் சேர்ந்த இவருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக ஏற்கனவே பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.

வங்கி இயந்திரங்களைப் பயன்படுத்தத் தெரியாத முதியவர்களைக் குறிவைக்கும் இந்நாபர், அவர்களுக்கு உதவுவது போல் நடித்து இரகசியக் குறியீட்டை (PIN) அறிந்துகொள்வார். பின்னர், கைதேர்ந்த முறையில் அவர்களின் அட்டையைத் திருடிவிட்டு, வேறு ஒரு போலியான அட்டையை அவர்களிடம் கொடுத்துவிட்டுத் தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது முன்பின் தெரியாதவர்களின் உதவியைப் பெறுவதைத் தவிர்க்குமாறும், எக்காரணம் கொண்டும் உங்களது இரகசிய இலக்கத்தை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் எனவும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...