மிக விரைவில் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி!!

d84d71cd aacf3765 c2da1cea c43eb1b3 a7fc0e8d d4314605

மிக விரைவில் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி!!

கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத இறுதிக்குள் வௌியிடவுள்ளன என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாத் தொற்று நிலைமையிலும், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை ஈடுபடுத்தி, வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

இம்முறை ஒரு லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளன என ஆணைக்குழுவின் உப தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version