யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் இன்று (02) திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் இராணுவ வாகனம் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மயிலிட்டி வீதியில் முதியவர் தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, அதே திசையில் வந்த இராணுவ வாகனம் அவர் மீது மோதியுள்ளது.
இக்கோர விபத்தில் முதியவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இராணுவத் தரப்புடன் இணைந்து இராணுவ பொலிஸாரும் (Military Police) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான இராணுவ வாகனத்தின் சாரதியிடம் மேலதிக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

