பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் (லசந்த விக்ரமசேகர) தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

