26 6986c9b45b665
செய்திகள்இந்தியா

புதுடில்லியில் சந்திப்பு: ரில்வின் சில்வா – எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சு!

Share

இந்திய கலாசார உறவுகள் கவுன்சிலின்” (ICCR) விசேட அழைப்பின் பேரில் இந்தியா சென்றுள்ள ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேற்று (06) சந்தித்துக் கலந்துரையாடினர்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை அடுத்தகட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து விரிவாகப் பேசப்பட்டது.

அண்மையில் இலங்கையைப் பாதித்த டித்வா (Ditwah) புயலின் போது, இந்தியா உடனடியாக வழங்கிய மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்புப்பணி ஒத்துழைப்புகளுக்கு ரில்வின் சில்வா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கான இந்தியாவின் ஆதரவு என்றும் தொடரும் என அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்தார். குறிப்பாக ‘அண்டை நாட்டுக்கு முன்னுரிமை’ (Neighbourhood First) என்ற கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், ரில்வின் சில்வாவின் இந்தப் பயணம் அதற்கான ஆரம்பகட்ட இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஜே.வி.பி.யின் உயர்மட்டக் குழுவினர் இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய இராஜதந்திர நெருக்கத்தைக் காட்டுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...