புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை, கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை (Heavy Mineral Mining Licenses) வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
புதிய கொள்கை அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்படும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.இல்மனைட் (Ilmenite), ரூடைல் (Rutile), சிர்கோன் (Zircon) மற்றும் கார்னட் (Garnet) போன்ற பெறுமதிமிக்க கனிம மணல்களுக்கான அனைத்து ஆய்வு மற்றும் அகழ்வு உரிமங்கள்.
வீடமைப்பு மற்றும் கட்டுமானத் துறைக்கு அத்தியாவசியமான மணல், கற்கள் போன்ற மூலப்பொருட்களை அகழ்வதற்கு இந்தத் தடை பொருந்தாது.
கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத அகழ்வுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புகளைக் கருத்திற்கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன:
தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப உரிமம் வழங்குவதைத் தவிர்க்க, முழுமையான உரிமச் செயல்முறை (Licensing Process) டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது.சட்டவிரோத அகழ்வுகள் மற்றும் அரச நிலுவைத் தொகையைச் செலுத்தாத நிறுவனங்களைக் கண்காணிக்க, ஜனாதிபதியின் அனுமதியுடன் “உடனடி சுற்றிவளைப்பு பிரிவொன்று” (Rapid Response Unit) நிறுவப்படவுள்ளது.
இது தொடர்பான முழுமையான வழிகாட்டல்கள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும்.
மிரிஜ்ஜவில பகுதியில் கனிம மணல் அகழ்வுக்குத் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை அமைச்சர் மறுத்தார். 2024 செப்டம்பரில் போக்குவரத்து தொடர்பான ஒரு கடிதமே வழங்கப்பட்டதாகவும், அது ஆய்வுக்கோ அல்லது அகழ்வுக்கோ வழங்கப்பட்ட முறையான உரிமம் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.