articles2Fv9KiOKnKD5iVuoS2PJSS
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய அரசியலமைப்பு விவாதத்தை உடனே ஆரம்பியுங்கள் – அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம்!

Share

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான தேசிய அளவிலான கலந்துரையாடலை அரசாங்கம் உடனடியாக ஆரம்பித்து, அதில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் எனப் பல அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

One Text Initiative அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

அரசாங்கம் தனது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்த போதிலும், புதிய அரசியலமைப்பு குறித்த விவாதங்களை வேண்டுமென்றே தவிர்த்து வருகிறது. ஜே.வி.பி அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து தனது உண்மையான நிலைப்பாட்டை எப்போதும் மறைத்தே வந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

பெரும்பான்மைவாத அரசியல் அமைப்பில் சிறுபான்மையினரின் கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கத்தின் பங்களிப்பு அவசியம். கடந்த தேர்தல்களில் வாக்குறுதி அளித்த போதிலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தற்போது இதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவித்தார்.

வருங்கால சந்ததியினரின் நலனுக்காக ஒரு நிலையான அரசியலமைப்பு அவசியம். அதற்கு அரசாங்கத்தின் ஈடுபாடு மிக முக்கியமானது எனத் தெரிவித்தார்.

ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க புதிய அரசியலமைப்பு உதவ வேண்டும். அரசாங்கத்தின் பங்களிப்பு இன்றி அர்த்தமுள்ள சீர்திருத்தத்தை எட்ட முடியாது எனத் தெரிவித்தார்.

ஒற்றை அரசியல் கட்சியின் நலனுக்காக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒருபோதும் எவராலும் ஏற்றுக்கொள்ளப்படாது. சந்திரிகா, ரணில் மற்றும் கோட்டாபய ஆகியோரின் காலங்களில் தயாரிக்கப்பட்ட வரைவுகள் தோல்வியடைந்ததற்கு இதுவே காரணம். அரசாங்கத்தின் சித்தாந்தம் முழு நாட்டினதும் சித்தாந்தமாக இருக்க முடியாது” எனவும் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...