capture 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிள்ளைகளின் கல்வி உரிமையை பறிக்காதே: ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆசிரியர்கள் பாரிய போராட்டம்!

Share

தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பிள்ளைகளை அந்தந்த பாடசாலைகளிலேயே அனுமதிக்கும் சலுகை நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று (05) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உணர்வுபூர்வமான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய பாடசாலைகளில் மூன்று வருடங்கள் சேவையை நிறைவு செய்யும் ஊழியர்களின் பிள்ளைகளை, அதே பாடசாலையில் சேர்ப்பதற்கான முன்னுரிமை நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தது.

2025 ஆம் ஆண்டு முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி இந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ‘தேசிய பாடசாலை ஆசிரியர் – பிள்ளைகள் ஒன்றியம்’ குற்றம் சுமத்துகின்றது.

நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களும் பணியாளர்களும் தங்களது சிறு பிள்ளைகளுடன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இது குறித்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், சாதகமான தீர்வு எட்டப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தமது கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமான உறுதிமொழி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனத் தெரிவித்து, பிள்ளைகளுடன் வீதியிலேயே அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சலுகை நிறுத்தப்பட்டதால், ஆசிரியர்கள் தமது பிள்ளைகளைத் தூர இடங்களிலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும், இது அவர்களின் கல்விப் பணியைச் சரிவரச் செய்யத் தடையாக இருக்கும் என்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...