MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

Share

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த புதல்வி சமித்ரி ரம்புக்வெல்ல, இன்று (06) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் முறையற்ற முறையில் ஈட்டப்பட்ட பணத்தை மறைப்பதற்கும், கையாள்வதற்கும் (பணச் சுத்திகரிப்பு – Money Laundering) உதவியளித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.இன்று பிற்பகல் கொழும்பு பிரதம நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதவான், பின்வரும் நிபந்தனைகளுடன் அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்:

தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள்.வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விசாரணைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தரம் குறைந்த மனித இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) மருந்துக் கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கில் ஏற்கனவே கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சூழலில், தற்போது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...

dailythanthi 2026 02 05 zok8nold vaiko33 1
செய்திகள்இந்தியா

தடையின் அடிப்படையே பொய்யானது- உயர் நீதிமன்றத்தில் வைகோ அதிரடி வாதம்; வழக்கு ஒத்திவைப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான மத்திய அரசின் தடையை நீக்கக் கோரி வைகோ தாக்கல்...