நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம் (Nayaru Main Bridge) முழுமையாக உடைந்துள்ளதாகவும், இதனால் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பாலம் உடைந்ததன் காரணமாக, பின்வரும் பகுதிகளுக்கான அனைத்துப் போக்குவரத்து நடவடிக்கைகளும் முற்றாக ஸ்தம்பித்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது:
முல்லைத்தீவிலிருந்து மணலாறு பகுதிக்கு, முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு,முல்லைத்தீவிலிருந்து கோக்கிலாய் பகுதிக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வீதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.