1735896199 Police L
செய்திகள்அரசியல்இலங்கை

நாடே ஒன்றாக விசேட நடவடிக்கை: 47,000-க்கும் அதிகமானோர் கைது; 1,000 கிலோவுக்கும் அதிக ‘ஐஸ்’ மீட்பு!

Share

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நாடே ஒன்றாக’ தேசிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த சில வாரங்களில் பாரிய அளவிலான கைதுகளும் போதைப்பொருள் மீட்புகளும் பதிவாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் 30-ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் மொத்தம் 47,703 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தச் சோதனைகளின் போது சந்தேக நபர்களிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன:

ஹெரோயின்: 276 கிலோகிராம் 374 கிராம்
ஐஸ் போதைப்பொருள்: 1,002 கிலோகிராம் 923 கிராம்
கஞ்சா: 1,411 கிலோகிராம் 936 கிராம்
இதுதவிர ஹஷிஷ் உள்ளிட்ட ஏனைய நச்சுப் போதைப்பொருட்களும் மீட்பு.

கைது செய்யப்பட்டவர்களில் 1,081 பேருக்கு எதிராக மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1,130 சந்தேக நபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 47 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...