1735896199 Police L
செய்திகள்அரசியல்இலங்கை

நாடே ஒன்றாக விசேட நடவடிக்கை: 47,000-க்கும் அதிகமானோர் கைது; 1,000 கிலோவுக்கும் அதிக ‘ஐஸ்’ மீட்பு!

Share

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நாடே ஒன்றாக’ தேசிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த சில வாரங்களில் பாரிய அளவிலான கைதுகளும் போதைப்பொருள் மீட்புகளும் பதிவாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் 30-ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் மொத்தம் 47,703 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தச் சோதனைகளின் போது சந்தேக நபர்களிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன:

ஹெரோயின்: 276 கிலோகிராம் 374 கிராம்
ஐஸ் போதைப்பொருள்: 1,002 கிலோகிராம் 923 கிராம்
கஞ்சா: 1,411 கிலோகிராம் 936 கிராம்
இதுதவிர ஹஷிஷ் உள்ளிட்ட ஏனைய நச்சுப் போதைப்பொருட்களும் மீட்பு.

கைது செய்யப்பட்டவர்களில் 1,081 பேருக்கு எதிராக மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1,130 சந்தேக நபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 47 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...