1735896199 Police L
செய்திகள்அரசியல்இலங்கை

நாடே ஒன்றாக விசேட நடவடிக்கை: 47,000-க்கும் அதிகமானோர் கைது; 1,000 கிலோவுக்கும் அதிக ‘ஐஸ்’ மீட்பு!

Share

இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நாடே ஒன்றாக’ தேசிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த சில வாரங்களில் பாரிய அளவிலான கைதுகளும் போதைப்பொருள் மீட்புகளும் பதிவாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் 30-ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் மொத்தம் 47,703 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தச் சோதனைகளின் போது சந்தேக நபர்களிடமிருந்து பின்வரும் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன:

ஹெரோயின்: 276 கிலோகிராம் 374 கிராம்
ஐஸ் போதைப்பொருள்: 1,002 கிலோகிராம் 923 கிராம்
கஞ்சா: 1,411 கிலோகிராம் 936 கிராம்
இதுதவிர ஹஷிஷ் உள்ளிட்ட ஏனைய நச்சுப் போதைப்பொருட்களும் மீட்பு.

கைது செய்யப்பட்டவர்களில் 1,081 பேருக்கு எதிராக மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1,130 சந்தேக நபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 47 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
02 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு: வன்முறைகளைத் தவிர்க்க நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு – பொலிஸார் கடும் எச்சரிக்கை!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்றுடன் (26) வெற்றிகரமாக நிறைவடைகின்றன....

londan
செய்திகள்உலகம்

ஸ்மெத்விக் கத்திக்குத்து: உயிரிழந்த இளைஞன் ஜீஷான் நினைவாக 9,000 பவுண்டுகள் நிதி சேகரிப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் ஸ்மெத்விக் (Smethwick) பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் அகால...

11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...