1763526428 PHON 6
செய்திகள்இலங்கை

தொலைத்தொடர்பு வரிச் சுமை: இணைய சேவைக்கு 20.3%, குரல் அழைப்புகளுக்கு 38% வரி – TRC அதிகாரிகள் உறுதி!

Share

இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள், இணைய சேவைக்காக 20.3% வரியையும், சாதாரண குரல் அழைப்புகளுக்காக (Voice Calls) 38% வரியையும் செலுத்த கடமைப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உறுதி செய்துள்ளது.

கடந்த (17) ஆம் திகதி இடம்பெற்ற அரச நிதி பற்றிய குழுவின் கூட்டத்தில், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதிகாரிகள் கலந்துகொண்டபோது இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தின்போது, முன் பணம் செலுத்தும் (Prepaid) கையடக்கத் தொலைபேசி சேவைகளைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு வரி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வினவினார்.

இதற்குப் பதிலளித்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதிகாரிகள், தொலைத்தொடர்பு சுமைகளின் கட்டமைப்பை விளக்கினர்.

தற்போது தொலைபேசி சேவைப் பாவனையாளர்களுக்கு SES, TL, மற்றும் VAT ஆகிய வரிகள் நடைமுறையில் உள்ளன.

இணையப் பயன்பாட்டிற்கு தொலைத்தொடர்பு வரி (Telecommunication Levy) விதிக்கப்படவில்லை. இருப்பினும், நுகர்வோர் தரவுகளுக்கு சுமார் 20.3% வரியைச் செலுத்துகின்றனர்.

குரல் சேவைகளுக்காக 38.4% வீதத்தில் வரி விதிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் விளக்கினர்.

100 Recharge செய்யும் ஒரு கையடக்க தொலைபேசிப் பாவனையாளரால், குரல் அழைப்புகளுக்காக 61.60 பெறுமதியான அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்.

நுகர்வோர் இறுதியில் பயன்படுத்தக்கூடிய பயனுள்ள தொகை அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டு முறையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த ஆண்டில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் வருமானம் ரூ45 பில்லியன் ஆகும் என்று அதன் தலைவர் குழுவிடம் தெரிவித்தார்.

இதில் ரூ18.2 பில்லியன் வருமான வரித் திணைக்களத்திற்குச் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டிற்கான தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் எதிர்பார்க்கப்படும் வருமானம் ரூபாய் 50 பில்லியன் ஆகும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...