டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

MediaFile 1 9

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை (Bailey Bridges) இன்று (31) இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

உறுதிப்படுத்தல்: இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், தனது உத்தியோகபூர்வ ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பாலங்கள், இலங்கையின் மீட்சிப் பணிகளுக்காக இந்தியா வழங்க முன்வந்துள்ள 450 மில்லியன் டொலர் பெறுமதியான விசேட பொருளாதாரப் பொதியின் ஒரு அங்கமாகும்.

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப் பெருக்கினால் நாட்டின் பல பகுதிகளில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டும், சேதமடைந்தும் உள்ளதால் பல கிராமங்களுக்கான போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பெய்லி பாலங்கள் விரைவாகப் பொருத்தக்கூடியவை என்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை உடனடியாகச் சீர்செய்ய முடியும். குறிப்பாகப் பாடசாலை மாணவர்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயணிக்கும் பொதுமக்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version