கையடக்கத் தொலைபேசி தகராறு: 14 வயது மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை!

1769831545 dead 6

கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில் நேற்று (30) இரவு நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த 14 வயது சிறுமிக்கும் அவரது தந்தைக்கும் இடையில் நேற்றிரவு தொலைபேசி ஒன்று தொடர்பாகக் கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தர்க்கம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தந்தை வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதமான மன்னாவால் (பெரிய கத்தி) மகளைக் குத்தியுள்ளார்.

பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த உரகஸ்மங்ஹந்திய பொலிஸார் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரான தந்தையைக் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது எல்பிட்டிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தந்தையே, ஒரு சிறிய காரணத்திற்காகத் தனது மகளைக் கொலை செய்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version