செய்திகள்உலகம்

கேமரா வேண்டாமே! உங்களைப் போன்றே பேசும் AI உருவம்: யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்!

Share

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை யூடியூப் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் மோகன் வெளியிட்டார்.

இனி படைப்பாளர்கள் கேமரா முன்னால் நிற்காமலேயே, தங்களைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு ‘AI உருவத்தை’ உருவாக்கி, அதன் மூலம் Shorts காணொளிகளைத் தயாரிக்க முடியும்.

இது ஓபன் ஏஐ நிறுவனத்தின் ‘Sora’ செயலி போன்ற ஒரு தொழில்நுட்பமாகும்.

வெறும் எழுத்து வடிவிலான கட்டளைகளை வழங்குவதன் மூலம் இந்த காணொளிகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. “AI என்பது படைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இருக்குமே தவிர, அவர்களைப் பதிலீடு செய்யும் ஒன்றாக இருக்காது” என்று நீல் மோகன் உறுதியளித்துள்ளார்.

மேலும், வெறும் எழுத்துக்கள் மூலம் சிறிய கேம்களை உருவாக்குதல் மற்றும் இசையில் புதிய சோதனைகளைச் செய்தல் போன்ற வசதிகள் புதிதாக உட்புகுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் (Instagram Reels) உள்ளது போல, இனி யூடியூப் ஷார்ட்ஸ் பகுதியிலும் புகைப்படங்களை (Image Posts) பதிவேற்றலாம்.

இவை நேரடியாக சந்தாதாரர்களின் பீடில் (Feed) தோன்றும். பெரிய திரையில் (TV) யூடியூப் பார்ப்பவர்களுக்கு ஒரே நேரத்தில் பல அலைவரிசைகளைப்பார்க்கும் வசதியை நமக்கு விருப்பமான முறையில் மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் உருவாக்கப்படவுள்ளது.

அத்தோடு, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் செய்திகளுக்காக 10-க்கும் மேற்பட்ட பிரத்தியேகமான ‘YouTube TV’ திட்டங்கள் அறிமுகமாகவுள்ளன.

மேலும், படைப்பாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவரது அனுமதியின்றி அவரது உருவத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான (Deepfake) காணொளிகளை கண்டறிந்து அகற்றும் தொழில்நுட்பத்தையும், காவல்துறை முறைப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைய யூடியூப் பலப்படுத்தி வருவதாகவும் நீல் மோகன் தெரிவித்துள்ளார்

 

 

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...