ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுடனான தொடர்பு மற்றும் ஏனைய சில நிதி விவகாரங்கள் குறித்த விசாரணைகளுக்காக அவர் ஏற்கனவே சிஐடி-யினால் அழைக்கப்பட்டிருந்தார்.
முந்தைய அழைப்பாணையின்போது அவர் வெளிநாட்டிற்குச் சென்றிருந்ததால், விசாரணையில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனையடுத்தே அவரது கோரிக்கைக்கு அமைய, இன்று (03) செவ்வாய்க்கிழமை புதிய திகதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது அவரிடம் சிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இது தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணை முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

