காசா பகுதியில் நிலவும் அதீத குளிர்காலநிலை காரணமாகக் குழந்தைகளின் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கவலை வெளியிட்டுள்ளது. இது அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடியின் உச்சக்கட்டத்தைக் காட்டுகிறது.
குளிர் காலநிலை தொடங்கியதிலிருந்து இதுவரை 10 குழந்தைகள் கடுமையான குளிரைத் தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த உயிரிழப்புகள் காசாவின் தற்போதைய மனிதாபிமானச் சூழல் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதையே பிரதிபலிக்கிறது.
போதிய வெப்பவசதிகள் இல்லாத தற்காலிகத் தடுப்பு மையங்களில் தங்கியுள்ள குடும்பங்களே பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. முறையான தங்குமிடங்கள் இல்லாத நிலையில், பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உறைய வைக்கும் குளிரால் உயிரிழக்கும் அபாயம் நீடிக்கிறது.
தற்போது காசாவில் நிலவும் கடுமையான குளிரில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க போர்வைகள், வெப்பமூட்டும் கருவிகள் மற்றும் முறையான தங்குமிட வசதிகளை உடனடியாக வழங்க வேண்டியது அவசியமென மனிதாபிமான அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

