1945650 baby
செய்திகள்இந்தியா

ஒன்றரை மாதக் குழந்தையை ₹3.80 லட்சத்திற்கு விற்ற பெற்றோர் உட்பட 8 பேர் கைது!

Share

சென்னையில் தனது ஒன்றரை மாதக் குழந்தையை 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த பெற்றோர் மற்றும் அதற்குத் துணையாக இருந்தவர்கள் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கே இந்தக் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் பிறந்த தந்து நான்காவது ஆண் குழந்தையை, வறுமை அல்லது இதர காரணங்களுக்காகத் தண்டையார்ப்பேட்டையைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் மூலம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதிக்கு கடந்த 19 ஆம் திகதி 3,80,000 இந்திய ரூபாய் மதிப்பிற்கு அந்தக் குழந்தை விற்கப்பட்டுள்ளது.

இரகசியத் தகவல் மூலம் இந்த சட்டவிரோத விற்பனையை அறிந்த காசிமேடு காவல்துறையினர் அதிரடி விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை விற்ற பெற்றோர், வாங்கிய தம்பதி மற்றும் இடைத்தரகர்கள் என மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட அந்த ஒன்றரை மாத ஆண் குழந்தை, தற்போது பாதுகாப்பாக அரச காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சட்டவிரோதக் குழந்தை தத்தெடுப்பு மற்றும் விற்பனைக்கு எதிராகக் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...