1945650 baby
செய்திகள்இந்தியா

ஒன்றரை மாதக் குழந்தையை ₹3.80 லட்சத்திற்கு விற்ற பெற்றோர் உட்பட 8 பேர் கைது!

Share

சென்னையில் தனது ஒன்றரை மாதக் குழந்தையை 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த பெற்றோர் மற்றும் அதற்குத் துணையாக இருந்தவர்கள் உட்பட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கே இந்தக் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் பிறந்த தந்து நான்காவது ஆண் குழந்தையை, வறுமை அல்லது இதர காரணங்களுக்காகத் தண்டையார்ப்பேட்டையைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் மூலம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதிக்கு கடந்த 19 ஆம் திகதி 3,80,000 இந்திய ரூபாய் மதிப்பிற்கு அந்தக் குழந்தை விற்கப்பட்டுள்ளது.

இரகசியத் தகவல் மூலம் இந்த சட்டவிரோத விற்பனையை அறிந்த காசிமேடு காவல்துறையினர் அதிரடி விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை விற்ற பெற்றோர், வாங்கிய தம்பதி மற்றும் இடைத்தரகர்கள் என மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட அந்த ஒன்றரை மாத ஆண் குழந்தை, தற்போது பாதுகாப்பாக அரச காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சட்டவிரோதக் குழந்தை தத்தெடுப்பு மற்றும் விற்பனைக்கு எதிராகக் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...