1746078431 Bus fare 6
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் உயருமா? – போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டும் கெமுனு விஜேரத்ன!

Share

எரிபொருள் விலை அண்மையில் குறைக்கப்பட்ட போதிலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடுமையான வாகன நெரிசலால், ஒரு லீற்றர் டீசலுக்கு 2 கிலோமீற்றருக்கும் குறைவான தூரமே பயணிக்க முடிகிறது. தேசிய கொள்கையின்படி இது 2.5 முதல் 3 கி.மீ ஆக இருக்க வேண்டும்.

நெரிசலால் எரிபொருள் விரயமாவதுடன், பேருந்துகளை இயக்குவதில் பாரிய நஷ்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வருடங்களாகியும் பொதுப் போக்குவரத்துத் துறையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும், அதிகாரிகளிடையே ஊழல் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நஷ்டத்தைச் சமாளிக்க, எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன்னதாக கட்டணத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குறுகிய தூர சேவைகளுக்கான ஆரம்பக் கட்டணத்தை 5 முதல் 6 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் சுமார் 14,000 தனியார் பேருந்துகள் சேவையில் உள்ள நிலையில், கொழும்பு பகுதிகளில் சேவையைத் தொடர்வது சவாலாக மாறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...