5 17 scaled
இந்தியாசெய்திகள்

என் தலைக்கு எதுக்கு ரூ.10 கோடி.. தலையை சீவ ரூ.10 சீப்பு போதும்!

Share

என் தலைக்கு எதுக்கு ரூ.10 கோடி.. தலையை சீவ ரூ.10 சீப்பு போதும்!

அயோத்தி துறவி ஒருவர் தமிழக அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி எனக் கூறியிருந்த நிலையில், உதயநிதி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக அமைச்சர் உதயநிதி, “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை நாம் எதிர்க்க கூடாது. அதன் நாம் ஒழித்துக் கட்ட வேண்டும். அதை போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி” என்று கூறினார்.

அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், அவர் தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில், உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அவர், உதயநிதி ஸ்டாலின் போட்டாவை கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோ ஒன்றும் வெளியாகியது.

இந்நிலையில், தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,”இந்த மிரட்டல் குறித்து பயப்பட மாட்டேன் என மீண்டும் உறுதியாக சொல்கிறேன்.

என் தலைக்கு ரூ.10 கோடி எல்லாம் வேண்டாம். என் தலையை சீவ ரூ.10 சீப்பு மட்டுமே போதும்” என கருணாநிதி பாணியில் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

மேலும், ஒரு சாமியாரிடம் எப்படி ரூ.10 கோடி இருக்க முடியும். அப்படி என்றால் அவர் போலி சாமியார் என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...