image 8b1394b07f
செய்திகள்இலங்கை

இலங்கையில் 30% முதியவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு: மருத்துவ நிபுணரின் அதிர வைக்கும் தகவல்!

Share

இலங்கையிலுள்ள 60 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் சுமார் 30 வீதமானோர் பல்வேறு மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதியோர் மக்கள்தொகை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவர்களது மனநலம் குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் மிகக் குறைவாகவே உள்ளது.

மறதி (Dementia) மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற நோய் அறிகுறிகளைப் பலரும் “வயதானால் இது சகஜம்” எனச் சாதாரணமான ஒன்றாகக் கருதுகின்றனர். சில நேரங்களில் இவை மூடநம்பிக்கைகளுடன் ஒப்பிடப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மனநலப் பாதிப்புகள் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதுடன், அவர்களுக்குத் தேவையற்ற உடல் ரீதியான சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன.

முதியவர்களின் மனநலனை மேம்படுத்த தேசிய மனநல காப்பகத்தில் (National Institute of Mental Health) பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

1999 ஆம் ஆண்டு முதல் முதியவர்களுக்கெனத் தனியான பிரிவு இயங்கி வருகிறது.ஆண்கள் மற்றும் பெண்களுக்கென இரண்டு தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதிகள் உள்ளன.

அண்மையில் தீகாயு எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பகல்நேர சிகிச்சை நிலையம் ஊடாக உளச்சிகிச்சை மற்றும் நடத்தை முறைகள் சார்ந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

மன அபிவிருத்தி ஊடாக வாழ்க்கை மாற்றம் எனும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், முதியவர்களின் மன மாற்றங்களை நோயின் அறிகுறிகளாகப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய ஆதரவை வழங்க முன்வருமாறு சமூகத்தைக் கேட்டுக்கொண்டார்.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...