IMG 20251228 WA0012
செய்திகள்இலங்கை

இலங்கையில் அவசரகால நிலை மேலும் நீடிப்பு: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Share

டிட்வா சூறாவளியின் பின்னர் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 28 ஆம் திகதி அமுலாகும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அவசரகால நிலை நீடிக்கப்பட்டு, புதிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது அவசரநிலை காரணமாக, பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகியவற்றின் நலன்களுக்காக, அவசரகால நிலையை நீடிப்பது பொருத்தமானது எனத் தாம் கருதுவதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய, அவசரகால நிலை நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...