asian tiger mosquito
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

Share

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சடுதியாக அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவர் பிரஷீலா சமரவீர இது குறித்துத் தெரிவிக்கையில், ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் 581 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நிலவிய மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு நுளம்புக் குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளமை இதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல், இருமல், சளி, கடுமையான உடல்வலி மற்றும் வாந்தி அறிகுறிகள் இருந்தால் கூடுதல் கவனம் தேவை:

காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC) செய்துகொள்வது கட்டாயமாகும். காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், தாமதிக்காமல் தகுதியான வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வீடு மற்றும் சூழலில் நீர் தேங்கும் இடங்களை அகற்றி, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
af522c79 ms3g0pcm6uei4b50d8z7a
செய்திகள்உலகம்

இங்கிலாந்து திருச்சபையின் வரலாற்றில் முதல் பெண் பேராயர்: சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதி!

இங்கிலாந்து திருச்சபையின் (Church of England) 106-வது கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி (Sarah Mullally)...

nipah virus warning dont do this alone health department advice 850x565
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிபா வைரஸ் அச்சம் தேவையில்லை: இலங்கைக்குப் பரவும் அபாயம் மிகக் குறைவு என அனில் ஜாசிங்க உறுதி!

இலங்கையில் நிபா (Nipah) வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார...

Keheliya Rambukwella 696x397 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கெஹெலியவின் ரூ. 748 மில்லியன் மோசடி விவகாரம்: பணமோசடி வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாரிய பணமோசடி விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்...

26 697304b4809de
செய்திகள்உலகம்

உலக வரலாற்றில் முதல் முறை: 5,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து தங்கம் விலை அதிரடி உயர்வு!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக 5,500 அமெரிக்க...