127533494 slppmeeting001 1
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதத்தை ஜனாதிபதி செயலில் காட்ட வேண்டும்- வடக்கு-கிழக்கு கரிநாள் போராட்டத்திற்கு SLPP கடும் எதிர்ப்பு!

Share

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘கரிநாள்’ அனுஷ்டிக்கப்பட்டு பேரணிகள் நடத்தப்பட்டமைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இனவாதத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால், சுதந்திர தினத்தன்று வடக்கு-கிழக்கில் கறுப்புக்கொடி ஏற்றி, கரிநாள் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. இது இனவாதம் தூண்டப்படுவதையே காட்டுகிறது. ஜனாதிபதி தனது பேச்சைச் செயலில் காட்ட வேண்டும் என இந்திக்க அனுருத்த வலியுறுத்தினார்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஷிரந்தி ராஜபக்சவை எப்.சி.ஐ.டி (FCID) க்கும், நாமல் ராஜபக்சவை சி.ஐ.டி (CID) க்கும் அழைத்திருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் வேட்டை என அவர் சாடினார். அரசாங்கம் தனது நிர்வாக இயலாமையை மறைக்கவே ராஜபக்சக்களைக் குறிவைப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

படையினர் உயிர்த்தியாகம் செய்து போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால்தான் இன்று அனைவரும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடிகிறது. ஆனால், இந்த அரசாங்கம் படையினரின் சேவையை ‘டித்வா’ புயல் பாதுகாப்புடன் மட்டும் மட்டுப்படுத்த முயல்வது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், தேசத்தின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்படும் பிரிவினைவாத மற்றும் இனவாதச் செயற்பாடுகளைத் தடுக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...