603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

Share

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கரையொதுங்கிய ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 3 அடி நீளமும், 25 முதல் 50 கிலோ கிராம் வரை எடையும் கொண்டவை என மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாக ஆழ்கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அல்லது மாற்றங்கள் காரணமாக இந்த ஆமைகள் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கருதுகின்றனர்.

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ள ஆமைகள் குறித்து அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அண்மைய நாட்களாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடலாமைகள் மற்றும் டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றமை சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றன.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...