603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

Share

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கரையொதுங்கிய ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 3 அடி நீளமும், 25 முதல் 50 கிலோ கிராம் வரை எடையும் கொண்டவை என மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாக ஆழ்கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அல்லது மாற்றங்கள் காரணமாக இந்த ஆமைகள் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கருதுகின்றனர்.

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ள ஆமைகள் குறித்து அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அண்மைய நாட்களாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடலாமைகள் மற்றும் டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றமை சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றன.

 

 

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...