MediaFile 2 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் சுடர்விட்ட தீப்பந்தப் போராட்டம்: படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச நீதி கோரி முழக்கம்!

Share

படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் நேற்று (27) மாலை உணர்வுப்பூர்வமான தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு அருகில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக அமையம், மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு ஊடக அமையத்தின் தலைவர் வா. கிருஸ்ணகுமார் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

ஆரம்ப நிகழ்வாக நினைவுத் தூபிக்கு முன்னால் சுடர் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அஞ்சலியைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்தைச் சூழ பெருமளவிலான பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் பின்வரும் விடயங்களை வலியுறுத்தினர். நாட்டின் உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை அற்ற சூழலில், ஊடகவியலாளர் படுகொலைகள் குறித்து சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலின்றிப் பணியாற்ற ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் இலங்கையில் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலோர் தமிழ் ஊடகவியலாளர்கள் என்பதுடன், அவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
Pallegama Hemaratne Thero
இலங்கை

நீதிமன்றத்தில் முன்னிலையான தேரர்!

இன்றைய தினம், அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம்...

Soul Beach hotel
இலங்கை

தந்தைக்கு பலலட்சம் வாடகை கொடுத்த ஷிரான் பாசிக் – திட்டமிட்ட பணச்சலவையா?

ஷிரான் பாசிக்கின் சோல்பீச் ஹோட்டலில் அமைக்கப்பட்ட ஓமான் ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் கட்டடத்திற்காக தனது தந்தைக்கு...

நவாலி திருவிழா
இலங்கை

நவாலி திருவிழாவிலும் அசம்பாவிதம் – பொதுமக்கள் பலரும் பாதிப்பு!

நேற்று இரவு, நவாலி அந்திரான் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் பனை மரம் ஒன்றும்...

dengue original 1
இலங்கை

எழுபதை கடந்தது டெங்கு மரணங்கள்!

2026 இன் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 93,381 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...