பொருளாதார மத்திய நிலையங்கள் இரு நாள்களுக்கு திறப்பு!!
ஊரடங்கு காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் இரு நாள்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதற்கமைய , எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளன.
மொத்த விற்பனைக்காக மாத்திரமே பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.