MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அனுதாபப் பிரேரணைகள் இன்று இடம்பெறுகிறது!

Share

சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றைய (அக்டோபர் 24, 2025) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.

இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல்நேரம்விடயம்
காலை 09.30 – 10.00நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையிலான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 – 11.00வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 11.00 – 11.30நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 11.30 – மாலை 05.00மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளது.

மாலை 05.00 – 05.30ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தே, ஹீன்மஹத்மயா லியனகே, டிக்ஸன் ஜே. பெரேரா, மேர்வின் டீ. த சில்வா, வை.ஜீ. பத்மசிரி, ஆர்.எம்.ஆர் சூல பண்டார, மற்றும் மாணிக்கவாசகர் கனகசபாபதி ஈழவேந்தன் ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணைகள் இன்று இடம்பெறவுள்ளது.

Share
தொடர்புடையது
25 68fb9443b29cd
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி...

25 68fbf3f9586ce
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு: 10 முக்கிய நகரங்களில் ஒரு மணி நேர தாமதம்!

அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

l19420250910170027
செய்திகள்இலங்கை

மெட்டா மற்றும் டிக் டாக் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு: வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்க வாய்ப்பு!

ஐரோப்பிய யூனியன், மெட்டா (Meta) மற்றும் டிக் டாக் (TikTok) ஆகியவற்றின் மீது குற்றம்சாட்டடொன்றை முன்வைத்துள்ளது....

images 1 6
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன்...