கலஹாவில் சோகம்: மின்சாரம் தாக்கி தாயும் மகளும் பரிதாப உயிரிழப்பு!

1770455662 dead 6

கலஹா காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட நவனெலிய (Nawaneliya) பகுதியில் இன்று (07) மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் 46 வயதுடைய தாயும், அவரது 13 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர்.வீட்டில் மின்சாரக் கசிவு ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அல்லது மின் சாதனங்களைப் பயன்படுத்த முயன்றபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சார விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து கலஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Exit mobile version