சமூகவலைத்தளங்களில் அதிகளவு அக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 24 அதிகமான FOLLOWERS கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் நேற்று திடீரென சம்பந்தமில்லாத மர்ம நபர் ஒருவரின் புகைப்படம் மற்றும் பதிவு இருந்ததை பார்த்த ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கமெண்ட்ஸ் பகுதிகள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சமந்தாவின் மேனேஜர் விளக்கமளித்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பதிவு தவறாக இடம்பெற்று விட்டது என்றும் தற்போது அது சரி செய்யப்பட்டது என்றும் மீண்டும் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை கேட்டப்பின் தான் இவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
#samantha #instagram #hack
Leave a comment