விஜய்யின் மகன் இந்தியன் இல்லையா!!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சஞ்சய் குறித்து அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் மகனான சஞ்சய் இந்தியர் இல்லை என்று தகவல் கூறப்படுகிறது.
கொரோனா அச்சம் உலகை உலுக்கி கொண்டிருக்கும் போது, விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவை விட்டு இந்தியாவுக்கு திரும்பவில்லை. ஏன் அவர் இந்தியாவிற்கு வரவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்களை தாய் நாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டிருந்தது இந்தியா. ஆனால், அப்போது கூட சஞ்சய் இந்தியாவிற்கு வரவில்லையாம்.
ஏனென்றால் விஜய்யின் மகன் சஞ்சய் பிறந்தது லண்டனில் தானாம். எனவே அவர் லண்டன் சிட்டிசன் ஆகிவிட்டாராம். வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வருவதை நிறுத்தி வைத்திருக்கிறது அரசு.
சஞ்சய் குறித்து பரவும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. பிரபல பத்திரிகை ஒன்றில் இதை பற்றி பதிவு செய்திருந்தனர். விஜய்யின் அரசியல் வருகைக்கு பின் இப்படிப்பட்ட செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.