32 4
சினிமாபொழுதுபோக்கு

நல்ல நபரை தேர்வு செய்ய வேண்டும்..விவாகரத்து குறித்து த்ரிஷா சொன்னது என்ன தெரியுமா?

Share

நல்ல நபரை தேர்வு செய்ய வேண்டும்..விவாகரத்து குறித்து த்ரிஷா சொன்னது என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஜோடியின் விவாகரத்து தகவல் தான்.

சில மாதங்களாக இந்த ஜோடி விவாகரத்து செய்யவுள்ளதாக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல் பரவியது.

ஜெயம் ரவி இதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் விவாகரத்து குறித்து சில தினங்களுக்கு முன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்த பதிவு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று இது குறித்து ஆர்த்தி ஒரு பதிவை வெளியிட்டார்.

ஜெயம் ரவி மட்டுமே தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்ததாகவும், இதுகுறித்து தன்னிடம் பேசவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு சினிமா வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷா திருமணம் குறித்தும், விவாகரத்து குறித்தும் இணையத்தில் ஒருமுறை பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

அதில், எனக்கு கல்யாணம் நடந்த பிறகு விவாகரத்து வாங்குவதில் நம்பிக்கை இல்லை, நான் சரியான நபரை சந்திக்கும்வரை கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். அதற்காக நான் காத்திருக்க தயாராக உள்ளேன்.

அவ்வாறு எனக்கு சரியான நபர் கிடைக்காமல் திருமணம் நடைபெறாமல் இருந்தால் கூட பரவா இல்லை அதை பற்றி நான் கவலை கொள்ள மாட்டேன்.

தவறான மனிதர்களை திருமணம் செய்து கொண்ட பிறகு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காக அந்த பந்தத்தில் இருக்கும் பலரை நான் பார்த்துள்ளேன், அதனால் நான் சரியான நபர் வரும் வரை காத்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...

world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...

Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...