கடந்த 2015 ஆம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 24 . டைம் ட்ராவலை மையமாக வைத்து திரில்லர் படமாக உருவான இப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருப்பார்.
அதில் ஆத்ரேயா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இயக்குனரான விக்ரம் குமார் 24 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கி வருவதாக கூறினார்.
மேலும் ஆத்ரேயா என்ற வில்லன் கதாபாத்திரத்தை மையமாக வைத்துதான் கதையை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
#suriya #cinema