download 5 1 6
சினிமாபொழுதுபோக்கு

ஜாக்குலினுக்கு உருகி உருகி கடிதம் எழுதிய சுகேஷ்!

Share

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் ஈஸ்டரை முன்னிட்டி இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், “மை பேபி, என் முயல் குட்டி… அடுத்த ஈஸ்டரை இதற்கு முன்பு கொண்டாடிய ஈஸ்டர்களில் மிகவும் சிறந்ததாக மாற்றுவேன். உங்களுக்கு மிகவும் பிடித்த விழாவில் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்.

இந்த வருடத்தில் இது உங்களுக்கு மிகவும் பிடித்தமான திருவிழா. இதில் உங்களுடன் இல்லாமல் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். நீங்கள் ஈஸ்டருக்கு முட்டையை உடைப்பதை பார்க்காமல் மிஸ் செய்கிறேன்.

என் பேபி நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா. இந்தப் பூமியில் உன்னைப்போல் யாரும் அழகாக இல்லை. மை பேபி, என் முயல் குட்டி உன்னைக் காதலிக்கிறேன்.

நான் உன்னைப் பற்றி நினைக்காத நேரமே கிடையாது. உன்னுடைய மிகவும் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.

அது உனக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும்” என்று சுகேஷ் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தை சுகேஷின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக் வெளியிட்டிருக்கிறார்.

இதற்கு முன்னும் தனது பிறந்தநாள் அன்று சுகேஷ் உருகி உருகி கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுவரை வெளியிட்டிருக்கும் கடிதங்களுக்கு ஜாக்குலின் எந்தவித பதிலும் தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#cinema

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...

26 3
சினிமாபொழுதுபோக்கு

‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகம்: படப்பிடிப்புத் தகவல்கள் மற்றும் முக்கிய மாற்றங்கள்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான...

25 3
பொழுதுபோக்குசினிமா

இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளராக உயர்ந்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத் ரவிச்சந்தர், தற்போது இந்தியா முழுவதும் உள்ள முன்னணி...