சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்பதும் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது .
இந்த நிலையில் நேற்று சௌந்தர்யா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்
கையில் குழந்தையுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் உட்கார்ந்திருப்பதும் அவர் பின்னால் ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்வதாக கூறிய சௌந்தர்யா ரஜினிகாந்த், ‘கடவுள் எனக்கு இந்த ஆண்டு பிறந்த நாள் பரிசாக ஒரு மிகச் சிறந்த பரிசாக வீர் பாப்பாவை கொடுத்துள்ளதாகவும் அதற்கு கடவுளுக்குத்தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கடவுளின் குழந்தை என் பின்னால் இருப்பதாகவும் அவரது உண்மையான ஆசீர்வாதம் தனக்கு இருப்பதாகவும் அவர் பெருமையுடன் ரஜினிகாந்த் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment