19 12
சினிமாபொழுதுபோக்கு

தேசிய விருது பெறும்போது இதை செய்வேன்.. நடிகை சாய் பல்லவி உருக்கம்

Share

தேசிய விருது பெறும்போது இதை செய்வேன்.. நடிகை சாய் பல்லவி உருக்கம்

மலையத்தில் தனது திரை பயணத்தை துவங்கி, இன்று இந்திய சினிமாவில் முக்கிய நாயகியாக மாறியுள்ளார் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் தண்டேல் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் கலக்கி கொண்டிருந்த சாய் பல்லவி, தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சாய் பல்லவி பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில்,” என் பாட்டி 21 வயதாக இருந்தபோது என் திருமணத்தில் நான் அணிந்து கொள்ள எனக்கு ஸ்பெஷலாக ஒரு புடவையை பரிசாக கொடுத்தார்.

எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று தெரியாது. ஆனால் தேசிய விருது போன்று நான் விரும்பும் உயரிய விருதை பெறும் போது அந்த புடவையை அணிந்து கொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு தேசிய விருது கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 1
சினிமாபொழுதுபோக்கு

ஜனநாயகன் ரிலீஸ்: தமிழகத் தேர்தலுக்குப் பிறகு வெளியீடு!

நடிகர் விஜய்யின் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் (சென்சார்)...

29 1
பொழுதுபோக்குசினிமா

நடிகர் விஜய் – த்ரிஷா ஒன்றாகத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு: சமூக வலைத்தளங்களில் விவாதம்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் சென்னையில் நடைபெற்ற...

20 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனு: நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணை!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில்...

19 3
பொழுதுபோக்குசினிமா

நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து மனு: அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் அதிர்வலைகள்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், விவாகரத்து கோரி தனது மனைவி சங்கீதா செங்கல்பட்டு...