ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

13 2

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேற்று முன்தினம் (26.02.2026) உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர விருந்தகத்தில் கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத் கொண்டாட்டங்கள் ஒருபுறம் வைரலாகி வரும் நிலையில், ராஷ்மிகாவின் கடந்த கால கசப்பான நினைவுகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதனை எப்படிக் கையாண்டார்கள் என்பது குறித்த தகவல்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

2018 ஆம் ஆண்டு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடனான நிச்சயதார்த்தம் முறிந்தபோது, ராஷ்மிகா சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் வெறுப்பையும் எதிர்கொண்டார். அந்தத் தருணத்தில் அவரது தாயார் சுமன் மந்தனா தெரிவித்த கருத்துக்கள், ஒரு குடும்பம் அந்த வலியை எப்படிக் கடந்து வந்தது என்பதை விளக்குகின்றன. “நிச்சயதார்த்தம் நின்றபோது நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம். அதிலிருந்து மீண்டு வர எங்களுக்கு நீண்ட காலம் பிடித்தது. ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ராஷ்மிகா தனது சிறந்த நண்பனான விஜய் தேவரகொண்டாவையே கணவனாகத் தேர்ந்தெடுத்துள்ளார். “என்னை நானே உணர வைத்த மனிதர்” என விஜயைப் பற்றி ராஷ்மிகா நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ராஷ்மிகா மற்றும் அவரது குடும்பத்தினர் பழைய கசப்பான நினைவுகளை முழுமையாகக் கடந்து, ஒரு புதிய மகிழ்ச்சியான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர்.

 

 

Exit mobile version