இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘துரந்தர்’ (Durandhar) திரைப்படம், திரைக்கு வந்த முதல் மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ. 160.15 கோடி வசூல் செய்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம், தனது பிரம்மாண்டமான மேக்கிங்கிற்காக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், துரந்தர் படத்தின் மூன்று நாட்கள் வசூல் விவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டனர். அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 160.15 கோடி வசூல் செய்துள்ளது.
இது முதல் வாரத்தில் இப்படத்திற்குக் கிடைத்துள்ள நல்ல வசூலாகப் பார்க்கப்படுகிறது.